புத்தளத்தில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்பு.
| | |

புத்தளத்தில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்பு.

புத்தளத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நேற்று அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அங்கம்மன – வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சானக திஸாநாயக்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகர் தனது வீட்டின் மேல் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பாடசாலை முடித்து வந்த பிள்ளைகள் தந்தை வீட்டில் இல்லாத நிலையில் தேடிய போதே, இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்….

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் வடக்கில்!
| |

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் வடக்கில்!

இரண்டாவது தென்னை முக்கோண வலயம் வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்படி, தென்னை பயிர்செய்கை நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு மன்னார் – ஆண்டாங்குளம் பாடசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஒரு இலட்சம் தென்னங்கன்றுகள் இதன்போது நடப்பட்டிருந்தன. இதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி இரண்டாவது தென்னை முக்கோண வலயம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. உலக தெங்கு தினத்தை முன்னிட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் தொழில்சாலைகள் அமைச்சர் வைத்தியர்…