பலஸ்தீன தாக்குதல்தாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்
| | | |

பலஸ்தீன தாக்குதல்தாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டனர்

இரு பலஸ்தீன தாக்குதல்தாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டு எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஜெரூசலத்திற்கான நுழைவாயிலில் நேற்று (30) இடம்பெற்றுள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வாகனத்தில் வந்த துப்பாக்கிதாரிகள் பஸ் நிலையத்தில் உள்ள பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக சூடு நடத்தியதாகவும் கிழக்கு ஜெரூசலத்தைச் சேர்ந்த இரு தாக்குதல்தாரிகளும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த இடத்திற்கு அம்புலன்ஸ் வண்டிகள் விரைந்ததுடன்…

மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்ட மோதல் இடைநிறுத்தம்
| | | |

மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்ட மோதல் இடைநிறுத்தம்

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிற்கு இடையிலான மோதல் இடைநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதன் காரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையில் யுத்தநிறுத்தம் மேலும் ஒருநாள் நீடிக்கப்படுகின்றது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. புதன்கிழமை (29) இரவு மேலும் 16 பணயக்கைதிகளை விடுதலை செய்துள்ள ஹமாஸ் மோதல் இடைநிறுத்த நீடிப்பை உறுதி செய்துள்ளது. இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் புதன்கிழமை (29) இஸ்ரேலிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பலஸ்தீன மாணவர்கள் மூவர் மீது துப்பாக்கிச்சூடு
| | | |

அமெரிக்காவில் பலஸ்தீன மாணவர்கள் மூவர் மீது துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் மூன்று பலஸ்தீன மாணவர்களை இலக்குவைத்து கடந்த சனிக்கிழமை துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. வேர்மன்ட் பல்கலைக்கழக வளாகத்தில் நபர் ஒருவர் பலஸ்தீன மாணவர்கள் மூவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வரும் மூவரும் அரபிமொழியில் உரையாடிக் கொண்டிருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்கப்பட்ட மூவரும் ஹிஷாம் அவர்தானி, கின்னன் அப்தெல் ஹமீத் மற்றும் தஹ்சீன் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஹிஷாம் முதுகிலும், தஹ்ஸீன் மார்பிலும் தாக்கப்பட்டுள்ளதுடன் கின்னன்…

இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்துங்கள் : ஈரான் ஜானாதிபதி
| |

இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்துங்கள் : ஈரான் ஜானாதிபதி

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடியாக தலையிட்டு பலஸ்தீன மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ஜனாதிபதி ரைசி, இந்தியப் பிரதமர் மோடியிடம் தொலைபேசி அழைப்பில் கலந்துரையாடும் போதே பின்வருமாறு கூரினார். தற்போது ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய குண்டு தாக்குதல்களால் காசாவில் 10,000க்கும் மேற்பட்ட பலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நெருக்கடியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது எனவும், யூத இஸ்ரேல்…

இஸ்ரேலில் விவசாயிகள் பற்றாக்குறை – 10,000 இலங்கையர்கள் ஒப்பந்தம்
| |

இஸ்ரேலில் விவசாயிகள் பற்றாக்குறை – 10,000 இலங்கையர்கள் ஒப்பந்தம்

இஸ்ரேலின் குளோப்ஸ் நாளிதழ் செய்தியில் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமான காசா – இஸ்ரேல் போரினால் விவசாயத் துறைக்கு தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போரினால் சுமார் 8,000 விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியதாகவும், தொடர்ந்து, 20,000 பலஸ்தீனிய விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இஸ்ரேலில் விவசாயத் தொழிலாளர்களின் பாரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது . இதற்காக 10,000 இலங்கைத் தொழிலாளர்களை அழைத்து வருவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் உள்விவகார அமைச்சர்…