அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை
|

அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 13ஆம் திகதி வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 18ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் நடைபெறும் என கல்வி அமைச்சின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மத்திய மாகாணம், சபரகமுவ மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் , வடக்கு மற்றும்…

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை – மகிழ்ச்சியில் மாணவரகள்
| |

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை – மகிழ்ச்சியில் மாணவரகள்

மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. கமகேவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குமாறு கோரிக்கையை விடுத்திருந்தார். இதற்கமைய கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கும், , அந்த நாளுக்கான கல்வி நடவடிக்கையை எதிர்வரும் சனிக்கிழமை (18) மத்திய மாகாணத்தில் தமிழ் பாடசாலைகளை நடத்துவதற்கும் ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்….