எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட பிராந்திய அரசியல் அதிகார சபையுடனான சந்திப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் (25) மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்தப் பொருளாதார முறையை மாற்ற வேண்டும், இல்லையெனில் இன்னும் 5-6 வருடங்களில் இந்தப் பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து இந்த…