தாமதமாகும் போர் நிறுத்தம்: உக்கிரமடையும் போர்
போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளின் விடுதலை அறிவிக்கப்பட்ட நிலையிலும் போர் நிறுத்தம் இன்னும் அமுலாகவில்லை. இன்றைய தினத்திற்கு (24) பிற்போடப்பட்ட நிலையிலும் காசாவில் நேற்றும் இஸ்ரேலிய படையினர் தாக்குதல்களையும் போர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். பணயக்கைதிகளின் விடுதலையுடன் இணைந்தே போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக இஸ்ரேல் கூறிய நிலையிலும், அது இன்று (24) வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை கடந்த புதன்கிழமை (22) காலையில் அறிவிக்கப்பட்டபோதும், ஒருநாள் கடந்துள்ள நிலையிலும் போர் நிறுத்தம் ஆரம்பமாகும் உத்தியோகபூர் நேரம் வெளியிடப்படவில்லை….