தவறவிடபட்ட உலக கிண்ண வாய்ப்பு
| |

தவறவிடபட்ட உலக கிண்ண வாய்ப்பு

2024 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் நிர்வாக நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கை இந்த வாய்ப்பை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய தொடரை நடாத்தும் வாய்ப்பை இலங்கையிடம் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது. நேற்று இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில் பாரிய மாற்றம் – அமைச்சரின் அதிரடி!
| | |

இலங்கை கிரிக்கெட்டில் பாரிய மாற்றம் – அமைச்சரின் அதிரடி!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் ஏழு பேர் கொண்ட இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளது. நடைபெற்றுவரும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியுடன் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி மோசமான படுதோல்வியை சந்தித்திருந்தது. இதனையடுத்து இலங்கை அணி தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்னால் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தனக்குள்ள அதிகாரங்களின் பிரகாரம் குறித்த இடைக்கால நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளது….