மீட்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள்;அர்னால்ட் டிக்ஸிற்கு குவியும் வாழ்த்து
| | | | | |

மீட்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள்;அர்னால்ட் டிக்ஸிற்கு குவியும் வாழ்த்து

இந்தியாவின் உத்திரகண்ட் மாநிலத்தில் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் எவ்வித ஆபத்தும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர். உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான மீட்பு குழுவினரின் உதவியுடன் இவர்கள் கடந்த செவ்வாய்க் கிழமை (28) மீட்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி கூட்டமைப்பின் தலைவராக செயற்படும் இவர் கட்டுமான ஆபத்துகள், பாதுகாப்பு செயல்திறன் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் ஆகியவற்றில்…

தொடரின் முதலாவது வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலியா
| | | |

தொடரின் முதலாவது வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலியா

இந்தியாவில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் 3 வது போட்டி நேற்று நடைபெற்றது. அஸ்ஸாமில் நடைபெற்ற இந்த போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி சார்பாக ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடியாக துடுப்பெடுத்தாடி…

தொடரின் முதல் போட்டியை வென்றது இந்தியா
| | | | |

தொடரின் முதல் போட்டியை வென்றது இந்தியா

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டி நேற்றைய தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை பெற்றனர். அணி சார்பாக ஜோஸ் இங்லிஸ் 110 ஓட்டங்களை அதிக பட்சமாக…

தவறவிடபட்ட உலக கிண்ண வாய்ப்பு
| |

தவறவிடபட்ட உலக கிண்ண வாய்ப்பு

2024 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் இலங்கையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் நிலவும் நிர்வாக நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கை இந்த வாய்ப்பை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய தொடரை நடாத்தும் வாய்ப்பை இலங்கையிடம் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது. நேற்று இந்தியாவின் அஹமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

6 வது முறை சம்பியன் ஆனது அவுஸ்திரேலியா
| |

6 வது முறை சம்பியன் ஆனது அவுஸ்திரேலியா

 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் சர்வதேச உலகக் கிண்ண இறுதிப் போட்டி நேற்றைய தினம் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நடைபெற்றிருந்தது. அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தீர்மானித்தது. இதற்கமைய,துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி…

சச்சினின் சாதனையை முறியடித்த விராட்!

சச்சினின் சாதனையை முறியடித்த விராட்!

இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் நட்ச்சத்திர  வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய அணியின் வீரர் விராட் கோஹ்லி முறியடித்துள்ளார். விராட் கோஹ்லி சர்வதேச ஒருநாள் போட்டிகளில், அதிக சதம் பெற்ற வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நேற்றைய தினம் முறியடித்தார். 463 போட்டிகளில் விளையாடிய சச்சின் டெண்டுகர் 49 சதங்கள் என்ற சாதனையை பதிவு செய்திருங்தார். இந்த சாதனையை 291 போட்டிகளில் விளையாடிய  விராட் கோஹ்லி 50 சதங்களை பெற்று முறியடித்தார். இதனை நேற்று…

டிக் டொக் செயலிக்கு தடை விதித்த நேபாள் அரசு
|

டிக் டொக் செயலிக்கு தடை விதித்த நேபாள் அரசு

நேபாளத்தில் உள்ள சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கதிற்கு டிக்டொக் செயலி தீங்கு விளைவிப்பதாக கூறி நேபாள அமைச்சரவை கூட்டத்தில் அதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், நேபாளத்தில் 2019 இலிருந்து டிக்டொக்கில் 1629 சைபர் குற்றச்சாட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவிக்கின்றது. டிக்டொக்கை இந்தியா 2021 இலும், ஆப்கானிஸ்தான் 2022 இலும் தடை செய்ததை தொடர்ந்து டிக்டொக்கினை தடை செய்த மூன்றாவது தெற்காசிய நாடாக…

சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இருந்து வெளியேறியது இலங்கை
|

சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இருந்து வெளியேறியது இலங்கை

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான தகுதி பெற்ற அணிகளின் விபரங்களை ஐ . சி . சி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு சர்வதேச ஒருநாள் உலகக்கிண்ண போட்டியில் பங்குபற்றிய இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் தவிர்ந்த ஏனைய 8 அணிகளும் இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த தொடரை நடாத்தும் பாகிஸ்தான் அணியுடன் சேர்த்து, நடப்பு உலகக் கிண்ண தொடரில் முதல் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 7 இடத்தைப் பெறும் அணிகளை சேர்த்து…

131 மணித்தியாலங்கள் டான்ஸ் மரதன் ஆடி உலக சாதனை

131 மணித்தியாலங்கள் டான்ஸ் மரதன் ஆடி உலக சாதனை

நுவரெலியா மாவட்டத்தில் இளைஞன் ஒருவர் 131 மணித்தியாலங்களில் டான்ஸ் மரதன் ஆடி உலக சாதனை படைத்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த தயாபரன் என்ற இளைஞனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். international warriors book of world records ஒழுங்கமைப்பில் உலக சாதனைக்கான டான்ஸ் இடம்பெற்றிருந்தது. அமைப்பு நடனத்தை இந்தியாவிலிருந்து இரகசிய கண்காணிப்பு கமரா மூலமாக பார்வையிட்டிருந்தது. லயன் யூட் நிமலனின் நெறியாள்கையில் சர்வதேச சட்ட நியதிகளுக்கமைவாக 6 நாட்களாக டான்ஸ் மரதன் நடைபெற்றுள்ளது. இதன் தொடக்க நிகழ்வு…

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 15 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்
|

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 15 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகள்

கல்பிட்டி இரணைதீவுக்கு அருகில் இந்தியாவில் இருந்து கடல் வழியாக படகொன்றில் கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் கல்பிட்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த படகில் இருந்து சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான 5 இலட்சத்து 70 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் , குறித்த போதை மாத்திரைகள் 10 பெட்டிகளில் பொதிகளாக வைக்கப்பட்டிருந்ததாகவும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் முடிவில் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டடுள்ளனர்….