ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்
| | | |

ஜனாதிபதியால் பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக  நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனமானது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இவர், மேல் மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரட்னவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் அவர் ஓய்வு பெற்றிருந்தார். இந்நிலையில், நாட்டில் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நீண்ட காலமாக வெற்றிடம் நிலவி வந்த நிலையிலேயே…

மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள்
| | | | |

மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள்

வாள் மற்றும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என்பன பதிக்கப்பட்ட பீரங்கி உட்பட 6 கலைப்பொருட்கள் நெதர்லாந்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இன்று (29) அதிகாலை 05.05 மணி அளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-554 மூலம் ஜேர்மன், பிராங்பேர்ட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த தொல்பொருட்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரினால் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் இக்கலைப்பொருட்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 1756 ஆம் ஆண்டு டச்சுக்காரர்களால்…

புதிய அவதாரமெடுக்கும் ஷகிப் அல் ஹசன்
| | | | | |

புதிய அவதாரமெடுக்கும் ஷகிப் அல் ஹசன்

பிரபல பங்காளதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் அரசியலில் களமிறங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது நாட்டின் 12 வது பாராளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாவட்டமான மகுரா-1 தொகுதியில் போட்டியிடவுள்ளார். இத்தேர்தலில் அவாமி லீக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளார் எனவும் இத்தேர்தல் ஜனவரி 7 ஆம் திகதி நடைபெறவுள்ளது எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷகிப் அல் ஹசன் சமீபத்தில் 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணியை தலைவராக…

அனைவருடனும் இணைந்து கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் சுத்தப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளேன்  -ஹரின் பெர்னாண்டோ
| | | |

அனைவருடனும் இணைந்து கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் சுத்தப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளேன்  -ஹரின் பெர்னாண்டோ

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டை தூய்மைப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (27) விளையாட்டுத்துறை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இது மிக முக்கியமான பொறுப்பாகும். ஏனெனில் விளையாட்டு என்பது நாம் அனைவரும் விரும்பும் இடம். அதேபோல், இந்த விதிகளை மாற்றும் போது பின்பற்ற…

எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி
| | |

எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட பிராந்திய அரசியல் அதிகார சபையுடனான சந்திப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று முன்தினம் (25) மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இந்தப் பொருளாதார முறையை மாற்ற வேண்டும், இல்லையெனில் இன்னும் 5-6 வருடங்களில் இந்தப் பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து இந்த…

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று நிறைவேற்றம்
| | |

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று நிறைவேற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைப்பெற்றது. இதில் 45 மேலதிக வாக்குகளினால் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 13 ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 14 ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இதன்…

இலங்கை கிரிக்கெட் மீதான முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்படும் சாத்தியம்
| | |

இலங்கை கிரிக்கெட் மீதான முக்கிய தீர்மானமொன்று எடுக்கப்படும் சாத்தியம்

இன்று இந்தியாவின் அஹமதாபாத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டம் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட வேண்டுமானால், அதற்காக விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதிநிதிகள் பங்குபற்றும் இக்கூட்டத்தில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா இக்கலந்துரையாடலில் இலங்கை கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பார்வையாளர்…

சபையமர்வுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன
| | | |

சபையமர்வுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன

நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சபாநாயகரால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட சபையமர்வுகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் சபையமர்வுகள் 5 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன. வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இறுதி நாளான இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்த குழப்ப நிலை ஏற்பட்டது. அவர் உரையாற்றும் போது அரச தரப்பு உறுப்பினர்கள் இடையிட்டு கடும் கூச்சலிட்டனர். இதன்போது,…

2024ல் ஜனாதிபதித் தேர்தல் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
| |

2024ல் ஜனாதிபதித் தேர்தல் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூன்று தேர்தல்கள் தொடர்பாக 31 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இந்த மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு 10 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்திருந்தது….

ரவூப் ஹக்கீமின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறுமா?
|

ரவூப் ஹக்கீமின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் கூறுமா?

2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றுவருகின்றது. இதில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வரவு செலவு திட்டத்தின் மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளார். நேற்றைய தினம் ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் பல யோசனைகளை முன் வைத்திருந்திருந்தார். இந்நிலையில், அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதே எமது கேள்வியாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடந்த வருடம் அரசாங்கத்தினால்…