| |

இஸ்ரேல் – ஹமாஸ் போரை நிறுத்துங்கள் : ஈரான் ஜானாதிபதி

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடியாக தலையிட்டு பலஸ்தீன மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி ரைசி, இந்தியப் பிரதமர் மோடியிடம் தொலைபேசி அழைப்பில் கலந்துரையாடும் போதே பின்வருமாறு கூரினார்.

தற்போது ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய குண்டு தாக்குதல்களால் காசாவில் 10,000க்கும் மேற்பட்ட பலஸ்தீன பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நெருக்கடியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது எனவும், யூத இஸ்ரேல் முஸ்லிம் பலஸ்தீனியர்களை ஒடுக்குவது தவறு என்றும், பலஸ்தீன மக்களின் பாதுகாப்பிற்காக ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேலை எதிர்க்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *